Saturday, April 30, 2011

கலைஞரின் தில்லு முள்ளு

மக்களை ஏமாற்றுவதில் கலைஞரைப் போல எந்த அரசியல்வாதியாளையும் இருக்க முடியாது.என்று கலாநிதிமாறன் திரையுலகில் காலடி வைத்தாரோ அன்றிலிருந்து தொடங்கியது கலைஞர் குடும்பத்தின் ஆதிக்கம்.கலாநிதி தொடங்கி உதயநிதி ,தயாநிதி ஆகியோர்களின் வருகையால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நிலைமை மோசமாகிப்போனது .இவர்கள் வாங்கும் படங்களைவெளியிட  மாநிலத்தில் உள்ள முக்கிய தியேட்டர்களை வாங்கியதோடு மட்டும்மல்லாமல் மற்ற படங்களை வெளியிடமுடியாமல் முட்டுக்கட்டை போட்டனர்.இப்படி அதிகாரத்தை பயன்படுத்தி அராஜகம் பண்ணுகிறார்கள் .இதை சொன்னால் கலைஞர் என் குடும்பத்தார்கள் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் உங்கள் நெஞ்செரிகிறது  என்று வாய் கூசாமல் சொல்லுகிறார்.இது கலைஞரின் சுயநலத்தையே காட்டுகிறது .இது ஒவ்வொரு பொது மனிதனின் கருத்தாகும்.     

No comments:

Post a Comment