Sunday, May 22, 2011

தமிழக அமைச்சர் சாலை விபத்தில் மரணம்.

அமைச்சரவையில் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற சுற்றுச்சூழல்  அமைச்சர் மரியம்பிச்சை திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் மரணமடைந்தார்.  திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு கே என் நேருவை தோற்கடித்து முதல் முறையாக எம்எல்எ வாக பதவி ஏற்றவர் .இன்று நடக்க விருந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள திருச்சியில் இருந்து சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பாடலூர் என்னும் இடத்தில பேருந்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானார் .காரை ஓட்டிச்சென்ற ஓட்டுனர் காயத்துடன் உயிர் தப்பினார்.அறுபது வயதுள்ள மரியம்பிச்சை உயிர் இழந்தது திருச்சி மாநகரத்துக்கு பெரும் இழப்பாகும் .நலத்துறை துறை அமைச்சர் என் .ஆர் சிவபதியும்  அவரை பின்தொடர்ந்து வந்துகொன்றிரிந்தார் .அதிர்ஷ்ட வசமாக காயத்துடன் அவர் உயிர் இழப்பில் இருந்து தப்பித்தார் .இதையொட்டி இன்று ஜார்ஜ் கோட்டையில் நடக்கவிருந்த கூட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.புதிய ஆச்சி அமைந்த ஒரு வாரத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதால் முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதனால் திருச்சியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.     

3 comments: